செவ்வாய், 1 டிசம்பர், 2009

இளமைப்பருவம் தொடர்கிறது....

அதிகமான பிடிவாதம் , சகிப்புத்தன்மை இல்லாதது, எல்லா விஷயங்களையுமே தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல்... இவையெல்லாம் இப்பருவத்தின் ஸ்பெஷல் குணங்கள். இவர்களிடம்
நெகடிவாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அதிலும் ,'நீ உருப்படவே போறதில்ல,.......பக்கத்துவீட்டு பையனை பாரு.அவன் எப்படி படிக்கிறான்
போன்ற வார்த்தைகளை பேசவே கூடாது. அவர்கள் சொல்லுகின்ற சின்ன
பொய்களுக்கு கடும் தண்டனைகள் கொடுக்கக்கூடாது. அது அவர்களை
மனதளவில் பாதித்து வீட்டை விட்டே ஓடிபோகலாமா என்ற நிலைமைக்கு
தள்ளிவிடும். இவர்கள் எப்போதும்துறுதுறுப்பாக இருப்பார்கள்.
இவர்களுக்கு நேரெதிராக சிலர் எதிலும் ஒட்டாமலும் ,யாரோடும் பேசாமலும் தனிமையை விரும்புகிறவர்களாகவும் இருப்பார்கள்.இவர்களுக்கு நண்பர்களே இருக்க மாட்டார்கள்.இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
ஒன்று...'பகல் கனவு காண்பது'.
இரண்டு....அவர்களின் மனது எதாவது ஒரு விஷயத்தினால் மிக மோசமாக
பாதிக்கப்பட்டிருக்கும். உதாரணம்... அம்மா-அப்பா சண்டை, காதல் தோல்வி.
இந்த மாதிரி குழந்தைகளை அன்பாக கவனித்துக்கொண்டாலே போரும்.
இந்த இளம்பருவ குழந்தைகளை நண்பர்களாக பாவித்தால் பிரச்சனையே
வராது. அவர்களுடைய விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும். பருவ
கால குழப்பங்களை கண்டுகொண்டு பக்குவமாக அவர்களுக்கு உதவ
வேண்டும்.
கடைசியாக ஒரு வார்த்தை..... 'நான் வளர்கிறேனே மம்மி' என்று
சொல்லாமல் சொல்கின்ற பருவம் இது. ஜாக்கிரதையாக ஹாண்டில் பண்ண
வேண்டிய பருவமும் கூட.
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக