செவ்வாய், 24 நவம்பர், 2009

பொறுத்தார் பூமி ஆள்வார்.

இது என்னுடைய முதல் பதிவு.

நாம் விரும்புகிற விஷயங்களே நம்மை சுற்றி நடக்கவேண்டும் என்று எதிபார்ப்பதற்கு நமக்கு உரிமை கிடையாது. நடப்பதை அப்படியே இயல்பாக
ஏற்றுக்கொண்டுவிட்டால் பொறுமையினை இழக்கவேண்டிய அவசியமே இருக்காது. அடிக்கடி கோபப்படுகிறோம் ,வெறுப்படைகிறோம். இது தேவைதானா
என்று கொஞ்ச நேரம் யோசித்துப்பார்த்தால், எவ்வளவு அற்பமான விஷயங்களுக்கெல்லாம் நாம் உணர்ச்சிவசப்பட்டு விடுகிறோம் என்பது புரியும்.
பொறுமை இல்லாமல் போனால் வாழ்க்கையே ஏமாற்றம் நிறைந்ததாகிவிடும்.
மற்றவர்களின் செயல்களை பார்த்து பொறுமை இழக்ககூடாது.பொருத்து போனால் அவர்கள் தானாகவே உங்களை புரிந்துகொள்வார்கள். பொறுமையில் எருமையாக இருக்கவேண்டும்.பொறுத்தார் பூமி ஆள்வார் என்று ஒரு வசனம் உண்டு.அதை பின்பற்றினால் வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.

1 கருத்து:

  1. Very well said...aanal pala peyar,porumayil erumaiyaga iruppadhai a sign of weakness aaga paarkiraargal. Reality is that you need more courage and strength to be patient and calm than to lose your patience.

    பதிலளிநீக்கு