வெள்ளி, 19 அக்டோபர், 2012

Manam ennum oonjal.

                     மனம் என்னும் ஊஞ்சல் 

நான்  சமீபத்தில்  சக்தி  விகடனில்  ஒரு கட்டுரை  படித்தேன் .வெற்றிக்கு  வழி
காட்டும்  விந்தை மனம்  என்ற  தலைப்பில்  திரு விஜயலட்சுமி  பந்தையன் 
ஒவ்வொரு  மாதமும்  ஒரு  கட்டுரை  எழுதி  வருகிறார். நான்  தவறாது   அதை
படிப்பேன்.எனக்கு  மிகவும்  பிடித்த  தொடர். இந்த  மாதம்  ஊஞ்சல்  மனம்  என்ற  தலைப்பில்  அவர்  எழுதி  இருந்தது  எனக்கு  ரொம்பவே  பிடித்தது.
அதை  நண்பர்களிடம்  பகிர்ந்துகொள்ளவே  இந்த  பதிவை  எழுதுகிறேன்.

ஊஞ்சலுக்கும்  நம்  மனதுக்கும்   ஒரு  சம்மந்தம்  இருக்கிறது.  அது  எப்படி?
ஒரு  கதை .....
ஒரு  ஊரில்  பணக்காரர்  ஒருவர்  இருந்தார். நிறைய  பணமிருந்தும்  மனதில் 
நிம்மதி  இல்லை. நிம்மதி  கிடைக்க  எவ்வளவோ  முயற்சி  செய்தும்  அது 
கிடைக்கவில்லை. அந்த  சமயத்தில்  அந்த  ஊருக்கு  ஞாநி  ஒருவர்  வந்தார்.
எல்லாருடைய  பிரச்சனைகளுக்கும்  அவர்  ஆலோசனை  சொன்னார் .இந்த 
விஷயத்தை  கேள்விப்பட்ட  பணக்காரரும்  ஞாநியை  சந்திக்க  போனார். தன் 
மனசு  சந்தோஷமாக  இல்லை .சந்தோஷமோ  அல்ல  துக்கமோ  எதுவுமே  என் விஷயத்தில்  நிலையாக  இருப்பதில்லை.கவலைப்படும்  சமயத்தில்  மனம்  மகிழ்ச்சியில்  திளைக்கிறது. அதே  போல சந்தோஷமாக  இருக்கும்போது  மனம்  வருத்தத்தில்  ஆழ்ந்துவிடுகிறது.இது  ஏன்  என்று 
எனக்கு  புரியவி ல்லை  என்று   சொன்னார். இதை  கேட்ட  ஞாநி   பதில் 
எதுவும்  சொல்லாமல்  ஒரு  பூனையை  பிடித்து  பணக்காரரிடம்   கொடுத்தார்.
பின்  பணக்காரரிடம்  இந்த  பூனை  உன்  வீட்டில்  ஒரு மாதம்  இருக்கட்டும்.
தினமும்  இது  என்னென்ன  செய்கிறது  என்பதை  மட்டும்  பார்த்துகொள்.
அதற்கு அப்புறமும்  உனக்கு  பிரச்சனை  இருந்தால்  இங்கு  வா  என்று 
சொல்லி  அனுப்பி வைத்தார்.

பணக்காரரும்  அவர்  சொன்னபடியே  பூனை  தினமும்  என்ன  செயகிறதுன்னு 
பார்க்க  ஆரம்பித்தார்.  முதல்நாள்  பூனை  வீட்டை  சுத்தி சுத்தி  வந்தது.சில 
 நாட்களுக்கு பிறகு  பங்கலவிளிருன்ற்ஹா  எலிகளை  வேட்டையாட  ஆரம்பித்தது . பணக்காரருக்கு  பூனையின்  செயல்  சந்தோஷத்தை  தந்தது.
அடுத்தவாரம்  பூனை  பணக்காரர்  ஆசையாக  வளர்த்துக் கொண்டிருந்த  கிளியின்  மீது  பாய்ந்து  குதறியது. பூனையின் செயல்  அவருக்கு  கோவத்தையும்   ஆத்திரத்தையும் வரவழைத்தது..பூனையை  விரட்டிடலாமானு  நினைத்தார்.ஆனால்  ஒரு  மாதத்திற்கு  கொஞ்ச  நாளே 
இருப்பதால்  கோபத்தை  அடக்கி  கொண்டார். அடுத்து வந்த  நாட்களில்  பூனை  வெளியிடங்களுக்கு  போய்வர  ஆரம்பித்தது.எதை எதையோ  கடித்து 
குதறியது.பணக்காரருக்கு  அதன்   எந்த  செயலும்  சந்தோஷத்தையோ  துக்கத்தையோ  தரவில்லை.

நாளையோடு ஒரு  மாதம்  முடிய  போகிறது.பணக்காரர்  பூனையின்  செயல்களை  மனதில்  அசை  போட்டு  பார்த்தார். முதலில்  பூனை  எலிகளை 
பிடித்தபோது  சந்தோஷமாக  இருந்தது.ஏனென்றால்  எலிகள்  தன்  சொந்தம்  
இல்லை.மேலும்  தனக்கு  தொந்தரவு  கொடுத்துவந்தது.  அவை  தொலைந்ததால்  நிம்மதி  ஏற்பட்டது.  அப்புறம்  சில  நாட்கள்  கழித்து
 தான்  ஆசையாக  வளர்த்த  கிளியை  கொன்றபோது   பூனையின்  மேல் 
கோவம்  வந்தது.  அதன்  காரணம்  கிளி  தம்முடையது  என்ற  எண்ணம்தான். 
கடைசியில்  பூனை   எதையெல்லாமோ  கடித்து  குதறியபோது  தம்மிடம்  எந்த  பாதிப்பும்  இல்லை. ஏனென்றால்  பூனையின்  செயலால்  எந்த  நஷ்டமோ  லாபமோ  இல்லை. இதையெல்லாம்  யோசித்து  பார்த்த  பணக்காரருக்கு   தன்  பிரச்சனை  மெல்ல  விலகுவது  தெரிந்தது.
முன்னே  செல்லும்  ஊஞ்சல்  அடுத்த  நொடியே  பின்னே  வந்துடும் . அது 
நிலையாக  நிற்காது  அது போலதான்  நம்  மனசும். தன்னம்பிக்கையோடு  ஒரு  சமயம்  முன்னாள்  போகும். மறு  சமயம்  எதோ  காரணத்தால்  பின்னாடி 
போகும். இதுதான்  ஊஞ்சல்  மனம்னு  Dr. விஜயலட்சுமி  பந்தையன்  விளக்கியுள்ளார்.

அடுத்த  மாதம்  அந்த  ஊஞ்சல்  மனத்தை  கட்டுப்படுத்துவது  எப்படின்னு  விளக்க போறார்.ஆவலோடு  காத்திருப்போம்.



 




 

 








   
 
 
 

சனி, 15 மே, 2010

கடவுள் பக்தியும் பயமும்.

மனிதர்களுக்கு கடவுள் பக்தி குறைய குறைய பயம் அதிகரிக்கிறது. பயம் எதனால் வருகிறது என்று யோசித்துப்பார்க்கவேண்டும்.
1. மனிதர்களுக்கு கடவுள் மேல் நம்பிக்கை இல்லாமல் போகும்போது வருகிறது.
2.ஆணவத்தால் வரக்கூடியது. அதாவது எல்லாம் தனக்கு தெரியும் என்ற
ஆணவத்தால் தவறு செய்துவிட்டு தடுமாருவோர் பலர். அப்போது பயம் வருகிறது.
இன்றைய காலக்கட்டத்தில் சிறிய விஷயங்கள் கூட மக்களுக்கு பயத்தையும்
கலவரத்தையும் உண்டாக்குவதன் காரணம் அவர்களுக்கு உண்மையான
பக்தி இல்லாமல் போனதுதான்.
உண்மையான பக்தியோடு இருப்பவர்களுக்கு பயமே இருக்காது. எல்லாத்தையும் கடவுள் என்னும் சக்தி பார்த்துக்கொள்ளும் என்ற நம்பிக்கை
அவர்களுக்கு இருக்கும். பயம் கலக்கம் அவர்களுக்கு இருக்காது. அந்த காலத்தில் வாழ்ந்த மகான்கள் பலர் எல்லை இல்லா பக்தி கடவுள் மீது
கொண்டிருந்ததால் பயமில்லாமல் சந்தோஷமாக வாழ்ந்தார்கள். எனவே நாம்
உண்மையான பக்தியுடன் கடவுளை நம்புவோம். அவர் தேவையற்ற பயத்தை
போக்கி நல்வழி காட்டுவார்.

புதன், 12 மே, 2010

Managing Anger

Aroma therapy is really useful to core suppressed anger.Sweet fragrance can make your
anger disappear. try it.

Splash your face with cold water to calm your nerves and cool down.It will reduce
your anger.

When your temper is rising count till 100, then breath deeply 10times to control
yourself.

Hurrying creates an atmosphere for rising temper.Try to do things with a calm mind.

If you are caught in a situation where you cannot do anything to change it, then
instead of fighting and feeling frustrated just relax and think of positive things
in life.

Whenever you feel angry, just close your eyes and breath deeply and think that your
anger is susiding. It will certainly relax you.

To calm your nerves and control your anger make a fist and open and close it several times.

செவ்வாய், 22 டிசம்பர், 2009

Mental block

ஒரு செயலுக்கான அடிப்படைமுயற்சியைக்கூட எடுக்காமல்," என்னால் இது
முடியாது..." என்ற எண்ணத்தை வளர்த்துக்கொள்ளும் பழக்கம். இதற்கு இன்னொரு பெயர் mental bloc. அதாவது முயற்சியே செய்யாமல் ஒரு செயலை தன்னால் செய்யமுடியாதுன்னு அடிமனதில் ஒரு எண்ணம் தோன்றும்.அதனால்
மத்தவர்கள் முயற்சி செய்ன்னு சொன்னாலும் நம்மால் செய்யமுடியாது.
உதாரணமாக சொன்னால் சிலர் நாலாவது வகுப்பு கணக்கை கொடுத்தால் கூட,
"ஐயோ என்னால் முடியாது. நான் கணக்குல வீக்னு சொல்லி அந்த இடத்தை விட்டு ஓடிவிடுவார்கள். சில பேர்களுக்கு குறிப்பாக பெண்களுக்குஉடல் பயிற்சி
பற்றிய mental bloc நிறைய உண்டு. காலையில் யோகா செய்தா உடம்புக்கும் மனதுக்கும் புத்துணர்வு கிடைக்கும்னு சொன்னாலும் சரி. அல்லது கட்டிக்கொள்கிற காட்டன் புடவையை அயர்ன் பண்ணிதான் கட்ட கூடாதான்னு
சொன்னாலும் சரி, உடனே இந்த வயசுல இதுதான் எனக்கு குறைச்சல்னு அலுத்து கொள்ளும் பெண்கள் பலர் உண்டு. அவர்களுக்கு வாழ்க்கையில் எதிர்
பார்த்த பல விஷயங்கள் நடந்திருக்காது.ஏதோ குழந்தைகளுக்காக வாழ்கிறேன்.
அவர்களை நல்லமுறையில் வளர்க்கரதுதான் முக்கியம் என்று தானே மனதுக்கு ஒரு கடிவாளம் போட்டுக்கொண்டு வாழ்துகொண்டிருப்பார்கள்.
அது தவறு .எல்லாவற்றையும் முயற்சி செய்து பார்க்கவேண்டும். நாம் நமக்காக
வாழவேண்டும் என்று அந்த mental block இலிருந்து வெளியே வரவேண்டும்.

புதன், 2 டிசம்பர், 2009

எஸ் .எம் .எஸ்.

நான் படித்து ரசித்த சில எஸ்.எம்.எஸ்கள் .
சாப்ட் வேர் என்ஜினியர்ஸ் படம் தயாரிச்சா என்ன மாதிரி டைட்டில் இருக்கும்?
G mail S/O email.
Ram தேடிய motherboard.
7 gb rainbow. colony.
எனக்கு 20mb உனக்கு 18 mb.
Programme ஆயிரம்.
ஒரு Mouse.. இன் கதை.
மானிட்டருக்குள் மழை.
எல்லாம் Proceesser செயல்.
நான் Graphic டிசைனர்.
C மனசுல C++.

நான் Complan boy.
நான் Complan girl.
அப்பா--- என்ன கொடும சார் இது? நான் பெத்த பிள்ளைகள் எவன் பெயரையோ
சொல்லிக்கிட்டு திரியுதுங்க.

College சம்மந்தப்பட்ட வடிவேல் டயலாக்ஸ் .
Class test....சொல்லவே இல்ல.
Teaching....முடியல.
Exam..... உட்கார்ந்து யோசிப்பாங்களோ.
Arrears.....ரிஸ்க் எடுக்கறதெல்லாம் எனக்கு ரஸ்க் சாப்பிடறமாதிரி.
Bit......எதையும் பிளான் பண்ணி பண்ணனும்.
Result.... இப்பவே கண்ணை கட்டுதே.
Degree.... வரும்..............ஆனா வராது.

இதைபோல நிறைய S.M.S கைவசம் இருக்கு. தொடரும்.....

செவ்வாய், 1 டிசம்பர், 2009

இளமைப்பருவம் தொடர்கிறது....

அதிகமான பிடிவாதம் , சகிப்புத்தன்மை இல்லாதது, எல்லா விஷயங்களையுமே தெரிந்துகொள்ளவேண்டும் என்ற ஆவல்... இவையெல்லாம் இப்பருவத்தின் ஸ்பெஷல் குணங்கள். இவர்களிடம்
நெகடிவாக பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அதிலும் ,'நீ உருப்படவே போறதில்ல,.......பக்கத்துவீட்டு பையனை பாரு.அவன் எப்படி படிக்கிறான்
போன்ற வார்த்தைகளை பேசவே கூடாது. அவர்கள் சொல்லுகின்ற சின்ன
பொய்களுக்கு கடும் தண்டனைகள் கொடுக்கக்கூடாது. அது அவர்களை
மனதளவில் பாதித்து வீட்டை விட்டே ஓடிபோகலாமா என்ற நிலைமைக்கு
தள்ளிவிடும். இவர்கள் எப்போதும்துறுதுறுப்பாக இருப்பார்கள்.
இவர்களுக்கு நேரெதிராக சிலர் எதிலும் ஒட்டாமலும் ,யாரோடும் பேசாமலும் தனிமையை விரும்புகிறவர்களாகவும் இருப்பார்கள்.இவர்களுக்கு நண்பர்களே இருக்க மாட்டார்கள்.இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம்.
ஒன்று...'பகல் கனவு காண்பது'.
இரண்டு....அவர்களின் மனது எதாவது ஒரு விஷயத்தினால் மிக மோசமாக
பாதிக்கப்பட்டிருக்கும். உதாரணம்... அம்மா-அப்பா சண்டை, காதல் தோல்வி.
இந்த மாதிரி குழந்தைகளை அன்பாக கவனித்துக்கொண்டாலே போரும்.
இந்த இளம்பருவ குழந்தைகளை நண்பர்களாக பாவித்தால் பிரச்சனையே
வராது. அவர்களுடைய விருப்பங்களுக்கு மதிப்பு கொடுக்கவேண்டும். பருவ
கால குழப்பங்களை கண்டுகொண்டு பக்குவமாக அவர்களுக்கு உதவ
வேண்டும்.
கடைசியாக ஒரு வார்த்தை..... 'நான் வளர்கிறேனே மம்மி' என்று
சொல்லாமல் சொல்கின்ற பருவம் இது. ஜாக்கிரதையாக ஹாண்டில் பண்ண
வேண்டிய பருவமும் கூட.
















இளமைப்பருவம்

குழந்தைப்பருவத்திலிருந்து மெள்ள மெள்ள அழகான பதின்மூன்று
வயது பருவத்துக்கு மன மற்றும் உடல் ரீதியாக மாறுவதுதான் டீனேஜ் எனப்படும் இளமைப்பருவம். இந்த மாறுதல் ஆரோக்கியமாக அமைந்தால்தான்
குழந்தைகளின் முழு வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கும். இந்த வயதில்
கொஞ்சம் சறுக்கினாலும் பாதிக்கப்படுவது குழந்தைகள் மட்டுமல்ல, பெற்றவர்களும்தான். எனவே இப்பருவத்தை இரு தரப்பும் பதற்றமில்லாமல்
கடக்கவேண்டும்.
இந்த வயதில் படிப்பால் ஏற்படும் மன அழுத்தம் அவர்களுக்கு அதிகமாக
இருக்கும்.இரண்டு வகையான மனப்பான்மையோடு இருப்பார்கள். 'எதிலும்
தான் மட்டுமே முதலாக இருக்கவேண்டும்.எல்லாரும் தங்களை பாராட்டவேண்டும் என்று நினைப்பார்கள். உயர்வான எண்ணங்களோடு
இருப்பார்கள். இன்னொன்று ,அதற்கு எதிரான 'என்னை விட்ட போதும் ' என்கிற
தாழ்வு மனப்பான்மையோடு இருக்கின்ற மனப்பான்மை. இந்த மாதிரி குழந்தைகளை இதைப் படி....ம்யுசிக் கிளாஸ் போ... ஆல் இந்தியா மெடிக்கல்
நுழைவு தேர்வு எழுத்து'.... இப்படியெல்லாம் கட்டயப்படுதினால் மன அழுத்தம்
ஏற்படும். அவர்களின் திறமையை கண்டறிந்து அதில் அவர்களை இடுபடுத்தினால் அவர்கள் மனஅழுத்தம் குறையும்.

இந்த வயது பிரச்சனைகளை விரிவாக அடுத்த இடுகையில் பார்க்கலாம்.
நன்றி.மீண்டும் வருக.